உள்ளூர் செய்திகள்

ஒரத்தநாடு பகுதியில் நாளை மின்நிறுத்தம்

Published On 2023-06-22 10:30 GMT   |   Update On 2023-06-22 10:30 GMT
  • வடசேரி துணைமின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருக்கிறது.
  • காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது.

தஞ்சாவூர்:

ஒரத்தநாடு தாலுகா, வடசேரி துணைமின் நிலையத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருக்கிறது. எனவே இந்த துணை மின் நிலையத்திலிருந்து மின் வினியோகம் பெறும் வடசேரி, திருமங்கலக்கோட்டை, முள்ளூர்பட்டிக்காடு, பரவாக்கோட்டை, தளிக்கோட்டை, கருப்பூர், புலவஞ்சி, கீழக்குறிச்சி, தொண்டராம்பட்டு, நெம்மேலி, அண்டமி, ஓலையக்குன்னம், வளையக்காடு, மண்டபம், மகாதேவபுரம், கண்ணுகுடி மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது. இந்த தகவலை ஒரத்தநாடு நகர் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் சுரேஷ் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News