உள்ளூர் செய்திகள்

வில்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சுகாதாரத்துறை அலுவலர் லாரன்ஸ் ஆய்வு செய்த காட்சி.

கொடைக்கானலில் காலை சிற்றுண்டி திட்டம் குறித்து ஆய்வு

Published On 2022-09-13 06:49 GMT   |   Update On 2022-09-13 06:49 GMT
  • கொடைக்கானலில் காலை சிற்றுண்டி திட்டம் குறித்து சுகாதாரத்துறையினர் ஆய்வு செய்தனர்.
  • மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிக ளிலும் வருகிற 16-ந் தேதி முதல் காலை சிற்றுண்டி வழங்கு வதற்கான ஏற்பாடு கள் தயார்படுத்தப்பட்டு வருகின்றன.

கொடைக்கானல்:

தமிழகம் முழுவதும் 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களின் இடைநின்றலை தவிர்க்கும் வகையில் அவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை வருகிற 15-ந் தேதி மதுரையில் நடைபெறும் விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

அதனைத் தொடர்ந்து 16-ந் தேதி மற்ற மாவட்ட ங்களில் அமைச்சர்கள், கலெக்டர் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் பங்கேற்று இந்த திட்டத்தை தொடங்கி வைக்கின்றனர். திண்டுக்கல் மாவட்டத்திலும் காலை சிற்றுண்டி வழங்கு வதற்கான பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு அதற்கான முன்னேற்பாடு பணிகள் தொடர்ந்து நடந்து வந்தது.

சிற்றுண்டி தயாரிக்கும் சமையலர்கள் எந்தவகை யான உணவு தயார் செய்ய வேண்டும் என்பது குறித்த வழிகாட்டு கையேடுகள் வழங்கப்பட்டு அவர்களுக்கு தேவையான உபகரணங்கள் வழங்கப்பட்டன. கொடைக்கானல் ஊராட்சி தொடக்கப்பள்ளிகளில் சுகாதாரத்துறையினர் சிற்றுண்டி தயாரிக்க பயன்படுத்தப்படும் மூலப்பொருட்கள் சரியான அளவில் உள்ளதா? என்றும் அவற்றின் தரம் குறித்தும் ஆய்வு செய்தனர்.

வில்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி யில் சுகாதாரத்துறை அலு வலர் லாரன்ஸ் தலைமை யிலான அலுவல ர்கள் இந்த சோதனையில் ஈடுபட்டனர். இதே போல் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிக ளிலும் வருகிற 16-ந் தேதி முதல் காலை சிற்றுண்டி வழங்கு வதற்கான ஏற்பாடு கள் தயார்படுத்தப்பட்டு வருகின்றன.

Tags:    

Similar News