உள்ளூர் செய்திகள் (District)

பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவி பாராட்டப்பட்டார்.

பொதுத்தேர்வில் முதல் மதிப்பெண் பிடித்த மாணவர்களுக்கு பரிசு

Published On 2023-07-05 07:30 GMT   |   Update On 2023-07-05 07:30 GMT
  • கண்தானம் வழங்கியவர்களின் குடும்பங்களை பாராட்டி கவுரவித்தார்.
  • பொதுமக்கள், மாணவ- மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.

வேதாரண்யம்:

வேதாரண்யம் அடுத்த ஆயக்காரன்புலம் அரிமா சங்க விழா நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட துணை ஆளுநர் சவரிராஜ் தலைமை தாங்கினார்.

மண்டல தலைவர் ராமஜெயம், வட்டார தலைவர் ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் வேதாரண்யம் நகர்மன்ற தலைவர் புகழேந்தி கலந்து கொண்டு கடந்த ஆண்டு 103 ஜோடி கண்களை தானமாக வழங்கியவர்களின் குடும்பங்களை பாராட்டி கவுரவித்தார்.

மேலும், 10, 12-ம் வகுப்பு தேர்வுகளில் முதல் மதிப்பெண் பெற்றவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கினார். 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளிகளுக்கு பாராட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.

முன்னதாக 2023-24-ம் ஆண்டின் புதிய நிர்வாகிகளை துணை ஆளுநர் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

தலைவராக செந்தில்குமார், செயலாளராக செந்தில் நாதன், பொருளாளராக திருமுருகன் தேர்வு செய்யப்பட்டனர்.

இதில் பொதுமக்கள், பள்ளி மாணவ- மாணவிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News