பேராசிரியர் அன்பழகன் 100-வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம்
- பட்டாசு வெடித்தும் கொண்டாடப்பட்டது.
- நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
ஊட்டி
நீலகிரியில் பேராசிரியர் அன்பழகன் 100-வது பிறந்தநாளை முன்னிட்டு நீலகிரி மாவட்ட தி.மு.க சார்பில் மாவட்ட திமுக அலுவலகத்தில் ஊட்டி கலைஞர் அறிவாலயத்தில் பேராசிரியரின் திருவுருவ படத்திற்கு நிர்வாகிகள் மலர்தூவி மரியாதை செலுத்தி இனிப்பு வழங்கியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் ஊட்டி நகர செயலாளர் ஜார்ஜ், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் இளங்கோ, ராஜூ, செந்தில், ஊட்டி நகராட்சி தலைவர் வாணீஸ்வரி, மாவட்ட ஊராட்சி துணை தலைவர் உமா ராஜன், மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள் காந்தல் ரவி, எல்கில் ரவி, ராஜா, ஊட்டி நகர பொருளாளர் அணில்குமார், மாவட்ட பிரதிநிதிகள் கார்திக், தம்பி இஸ்மாயில், மாவட்ட அணிகளின் துணை அமைப்பாளர்கள் நாகராஜ், ஜெயராமன், ஆட்டோ ராஜன், மார்கெட் ரவி, தியாகு, அமலநாதன், ஊட்டி நகர மன்ற உறுப்பினர்கள் ரமேஷ், ரகுபதி, விஷ்னு, கஜேந்திரன், மீனா, கிளை செயலாளர்கள் வெங்கடேஷ், ஆட்டோ பாபு, பெரியசாமி, ஸ்டான்லி, நிக்கோலஸ், ராஜம்மா, உதயகுமார் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.