உள்ளூர் செய்திகள்
ரூ.1.5 கோடியில் திட்ட பணி: எம்.எல்.ஏ. பூமிபூஜை
- சிமெண்ட் சாலை, வடிகால்கள் உள்ளிட்ட வளர்ச்சி பணிகளுக்கு பூமிபூஜை நடைபெற்றது.
- பிரகாஷ் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார்.
தேன்கனிக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக் கோட்டை பேரூராட்சியில் ரூ.1.50 கோடி மதிப்பில் சிமெண்ட் சாலை, வடிகால்கள் உள்ளிட்ட வளர்ச்சி பணிகளுக்கு பூமிபூஜை நடைபெற்றது.
பேரூராட்சி தலைவர் சீனிவாசன் தலைமை வகித் தார். செயல் அலுவலர் மனோகரன், துணை தலைவர் அப்துல்கலாம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் பிரகாஷ் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் பேருராட்சி மன்ற வார்டு கவுன்சிலர்கள் கிருஷ்ணன், மணிவண்ணன், லிங்கோஜிராவ் ,ஸ்ரீதர், சுமதி ,ரியானா பேகம், நாசிமா, கெளரி சென்னிரா, பிரேமா சேகர் மற்றும் அவைத்தலைவர் சீனிவாசன், துணை செயலாளர் இதயத்துல்லா, பொருளாளர் வெங்கடேஷ், மாவட்ட பிரதிநிதி சக்திவேல், மேலும் நாகராஜ், மஞ்சு, ஆனந்த் ,சல்மான் ,உள்ளிட்ட நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்