உள்ளூர் செய்திகள்
பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிர்ப்பு: கிராம மக்களிடம் கருத்து கேட்ட அன்புமணி ராமதாஸ்
- விமான நிலையம் அமைக்க கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
- பாமக சார்பில் பரந்தூர் விமான நிலையம் குறித்து கிராம மக்களிடம் கருத்து கேட்பு கூட்டம்
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் அருகே பரந்தூர் பகுதியில் விமான நிலையம் அமைப்பதற்கு 12 கிராமங்களில் உள்ள விளைநிலங்கள், குடியிருப்புகள், எடுக்கப்படுவதால் கிராம மக்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது எனக் கூறி விமான நிலையம் அமைக்க கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் பரந்தூர் விமான நிலையம் குறித்து கிராம மக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
கருத்து கேட்பு கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்பி கலந்து கொண்டு கிராம மக்களிடம் கருத்துக்களை கேட்டறிந்தார்.