உள்ளூர் செய்திகள்

கோத்தகிரியில் நடைபாதை கேட்கும் பொதுமக்கள்

Published On 2023-05-30 09:06 GMT   |   Update On 2023-05-30 09:06 GMT
  • அம்பேத்கர் நகரில் 40-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறது.
  • அனைத்து அரசு அதிகாரிகளிடமும் பொதுமக்கள் சார்பில் மனு தரப்பட்டது.

அரவேனு,

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகில் உள்ள சோலூர்மட்டம், அம்பேத்கர் நகரில் 40-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறது. இங்கு போதிய நடைபாதை வசதிகள் இல்லை.

இதுகுறித்து மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட அனைத்து அரசு அதிகாரிகளிடம் மனு தரப்பட்டது. ஆனாலும் பலனில்லை. இதுகுறித்து அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் கூறுகையில், எங்கள் பகுதிக்கு போதிய நடைபாதைகள் இல்லை.

எனவே நாங்கள் காட்டுவழி பாதையில் சென்று திரும்ப வேண்டி உள்ளது. எனவே அரசு இந்த விஷயத்தில் உடனடியாக தலையிட்டு, எங்களுக்கு ஊருக்குள் வசதியான நடைபாதைகள் அமைத்து தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Tags:    

Similar News