உள்ளூர் செய்திகள்

பராமரிப்பின்றி காணப்படும் பயணிகள் நிழற்குடை சீரமைக்கப்படுமா?- பொதுமக்கள் எதிர்பார்ப்பு

Published On 2022-11-11 10:37 GMT   |   Update On 2022-11-11 10:37 GMT
  • பஸ் நிறுத்த நிழற்குடையில் இரவு நேரங்களில் சமூக விரோதிகள் மது குடித்து விட்டு அங்கே பாட்டில்களை வீசியுள்ளனர்.
  • பராமரிப்பின்றி காணப்படும் பஸ் நிறுத்த நிழற்குடையை சீரமைக்க ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கண்டிகை:

செங்கல்பட்டு மாவட்டம் கண்டிகை அருகே நல்லம்பாக்கம் கிராமத்தில் உள்ள பயணிகள் நிழற்குடை மிகவும் பழுதடைந்த நிலையில் பராமரிப்பு இல்லாமல் மோசமான நிலையில் காணப்படுகிறது. மேலும் இந்த பஸ் நிறுத்த நிழற்குடையில் இரவு நேரங்களில் சமூக விரோதிகள் மது குடித்து விட்டு அங்கே பாட்டில்களை வீசியுள்ளனர். இதனால் இந்த கிராமத்தை சேர்ந்த பள்ளி மாணவ மாணவிகள் பொதுமக்கள் பஸ் ஏறுவதற்காக வரும்போது மழைக்கு கூட நிழற்குடையில் ஒதுங்கி நிற்க முடியாமல் அவதிப்படுகின்றனர்.

எனவே பராமரிப்பின்றி காணப்படும் பஸ் நிறுத்த நிழற்குடையை சீரமைக்க ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News