உள்ளூர் செய்திகள் (District)
குண்டும் குழியுமான சாலையில் நாற்று நட்டு பொதுமக்கள் போராட்டம்
- கொத்தூர் கிராமத்தில் உள்ள தார் சாலை குண்டும் குழியுமாக காட்சியளித்து வருகிறது.
- பொதுமக்கள் சாலையின் நடுவில் நாற்று நட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நீடாமங்கலம்:
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தாலுகா ரெகுநாதபுரம் அருகே உள்ள கொத்தூர் கிராமத்தில் உள்ள தார் சாலை குண்டும் குழியுமாக காட்சியளித்து வருகிறது.
கிராம மக்கள் இந்த சாலையின் வழியே அம்மாபேட்டை உள்ளிட்ட அருகில் உள்ள மற்ற ஊர்களுக்கும் செல்வதற்கு பயன்படுத்தி வருகின்றனர்.
சாலை வெகு நாட்களாக பராமரிப்பின்றி மேடு பள்ளங்கள் நிறைந்து காணப்படுவதால் கடும் அவதியடைந்து வந்தனர்.
இது குறித்து பலமுறை அதிகாரிகளிடம் கூறியும் நடவடிக்கை எடுக்கவில்லை.
இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் சாலையின் நடுவில் நாற்று நட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உடனடியாக சாலை சீரமைத்து தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.