உள்ளூர் செய்திகள்
லஞ்சம் வாங்கிய வருவாய் ஆய்வளருக்கு 10 ஆண்டுகள் சிறை
- லஞ்சம் வாங்கிய வருவாய் ஆய்வளருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டது
- ரூ.6 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் வட்ட வழங்கல் அலுவலகத்தில் முதுநிலை வருவாய் ஆய்வாளராக பணியாற்றியவர் சுப்பையா. இவர் 2009-ல் பச்சமுத்து என்பவருக்கு ரேஷன் கார்டு வழங்கலாம் என பரிந்துரை செய்வதற்கு ரூ.500 லஞ்சம் பெற்றுள்ளார். இது தொடர்பாக புதுக்கோட்டை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவினர் சுப்பையா மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். புதுக்கோட்டை தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்த இந்த வழக்கில் நீதிபதி தீர்ப்பளித்தார். அதில் குற்றம் சாட்டப்பட்ட சுப்பையாவுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.6 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.