அனுமதியின்றி நடத்தப்பட்ட மஞ்சுவிரட்டில் காளை முட்டி வாலிபர் பலி
பொன்னமராவதி:
பொன்னமராவதி அருகே வார்பட்டு கிராமத்தில் மஹா சிவராத்திரியை முன்னிட்டு மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது. இந்த மஞ்சுவிரட்டில் அவிழ்த்து விடுவதற்காக புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, திண்டுக்கல், திருச்சி உள்ளிட்ட தமிழ்நாட்டின்பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட காளை அழைத்து வரப்பட்டி ருந்தன. சீறிப்பாய்ந்து வந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் அடக்கினர். மாடுகளை பிடித்த வீரர்களுக்கும் பிடிபடாத மாட்டின் உரிமையாளர்களுக்கும், பரிசுகள் வழங்கப்பட்டது. இந்த மஞ்சு விரட்டினை காண்பதற்காக பொன்ன மராவதி சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் திரண்டிருந்தனர்.
காவல்துறை அனுமதியின்றி நடைபெற்ற இந்த மஞ்சுவிரட்டு போட்டியில் உரிய பாதுகாப்பு வழிமுறைகள் கடைபிடிக்கப்படவில்லை. ஆங்காங்கே காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. இதன் காரணமாக கூட்டத்தில் நின்று மஞ்சுவிரட்டை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த கண்ணணூர் பகுதியை சேர்ந்த ராமு என்பவரின் மகன் சிவகுமார் (வயது 25) காளை முட்டி சம்பவ இடத்தில் பலியானார்.
இது குறித்து பொன்னமராவதி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.