உள்ளூர் செய்திகள் (District)

மாணவ- மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா

Published On 2022-12-01 09:06 GMT   |   Update On 2022-12-01 09:06 GMT
  • மாணவ- மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது
  • வன உயிரின வார விழா போட்டிகளில் வெற்றி பெற்ற

புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், வனத்துறையின் சார்பில், வன உயிரின வார விழாவை முன்னிட்டு நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றிப்பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பதக்கம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட கலெக்டர் கவிதா ராமு வழங்கினார்.

தமிழ்நாடு வனத்துறையின் மூலம் அக்டோபர் முதல் வாரத்தில் கொண்டாடப்படும் 'வன உயிரின வார விழா" முன்னிட்டு 2022-ஆம் ஆண்டிற்கான வன உயிரின வார விழா போட்டிகள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர் களுக்கு இடையே நடத்தப்பட்டது. இதில் புதுக்கோட்டை மாவட்டத்திலிருந்து அதிகளவு மாணவ, மாணவியர்கள் கலந்துக்கொண்டனர். இப்போட்டியானது மாணவர்கள் வனத்துறை தொடர்பான புரிந்துணர் களையும், அவர் களின் பங்கெடுப்புகள் குறித்தும் ஊக்குவிக்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் முதல் வாரத்தில் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் நடத்தப்பட்ட போட்டிகளில் கலந்துக்கொண்டு வெற்றி பெற்ற பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு இன்றையதினம் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், மாவட்ட கலெக்டர் கவிதா ராமு பதக்கம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார்கள்.

நிகழ்ச்சியில் மாவட்ட வன அலுவலர் பிரபா, மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கவிதப்பிரியா, மாவட்ட கல்வி ஆய்வாளர்கள் குரு.மாரிமுத்து, சாலைசெந்தில், புதுக்கோட்டை வனக்கோட்ட அனைத்து வனச்சரக அலுவலர்கள், வனவர்கள், வனக்காப்பாளர் கள் மற்றும் வன ஊழியர்கள் கலந்துகொண்டனர். 

Tags:    

Similar News