உள்ளூர் செய்திகள் (District)
மைக்ரோவன் வெடித்து பேக்கரி மாஸ்டர் சாவு
- மைக்ரோவன் வெடித்து பேக்கரி மாஸ்டர் உயிரிழந்தார்
- பணி செய்து கொண்டிருந்த போது நடந்தது
புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கொத்தமங்கலம் ஊராட்சியை சேர்ந்தவர் ராமசாமி மகன் முருகேசன் (வயது 39). இவர் ஆலங்குடி அருகே உள்ள கல்லாலங்குடி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் உள்ள ஒரு கடையில் ஸ்வீட் உணவுகளை தயார் செய்து கடந்த எட்டு ஆண்டுகளாக தொழில் செய்து வருகிறார்.
இந்நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பேக்கரி உணவுகள் ஆர்டரின் பேரில் அதிகளவு தயாரித்துக் கொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாராத விதமாக அங்கு இருந்த மைக்ரோவன் வெடித்து சிதறியது. இதில் முருகேசன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து ஆலங்குடி காவல் ஆய்வாளர் அழகம்மை வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.