உள்ளூர் செய்திகள்

மாட்டுவண்டி எல்கை பந்தயம்

Published On 2023-03-09 06:45 GMT   |   Update On 2023-03-09 06:45 GMT
  • 58 ேஜாடி மாடுகள் கலந்து கொண்டது
  • சாலையின் இருபுறங்களிலும் நின்று மக்கள் ரசித்தனர்

அறந்தாங்கி,

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா ஏம்பல் கிராமத்தில் ஸ்ரீ முத்தையா சாமி கோவிலில் ஆண்டுதோறும் மாசிமக திருவிழாவை முன்னிட்டு மாட்டுவண்டி எல்கை பந்தையம் நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு நடைபெற்ற பந்தயத்தில் புதுக்கோட்டை, தஞ்சை, நாகை,மதுரை, சிவகங்கை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து 58 ஜோடி மாடுகள் போட்டியில் பங்கேற்றன.3 பிரிவுகளாக நடைபெற்ற பந்தையத்தில் பெரியமாடு பிரிவில் 10 ஜோடி மாடுகளும், நடுமாடு பிரிவில் 16 ஜோடி மாடுகளும், நடுமாடு பிரிவில் ஜோடி 32 மாடுகளும் போட்டியில் கலந்து கொண்டு சீரிப்பாய்ந்தன. பந்தையத்தில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாடுகளுக்கு 3 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பிலான கோப்பைகள் மற்றும் ரொக்கப்பணம் பரிசாக வழங்கப்பட்டது. மேலும் மாடுகளை சிறப்பாக ஓட்டி வந்த சாரதிகளுக்கு கொடிப்பரிசு மற்றும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது. சாலையின் இருபுறத்திலும் மக்கள் திரண்டிருந்து பந்தையத்தை கண்டு ரசித்தனர். .விழாவினை ஏம்பல் இளைஞர்கள், கிராமத்தார்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.

Tags:    

Similar News