உள்ளூர் செய்திகள் (District)
- புதுக்கோட்டையில் சதுர்த்தி விழா நடைபெற்றது
- விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகரை வழிபட்டுச் சென்றனர்
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை பெரிய கடை வீதியில் உள்ள ராஜ விநாயகர் ஆலயத்தில் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு விநாயகருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. தொடர்ந்து நெய் தீபம் ஏற்றப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகரை வழிபட்டுச் சென்றனர். விழாகுழு சார்பில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.