உள்ளூர் செய்திகள் (District)

தண்ணீரில் மூழ்கி குழந்தை சாவு

Published On 2022-12-20 07:38 GMT   |   Update On 2022-12-20 07:38 GMT
  • வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த போது விபரீதம்
  • தண்ணீரில் மூழ்கி குழந்தை உயிரிழந்தார்

புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம் திருநாளூர் தெற்கு பகுதியை சேர்ந்த தம்பதியர் மகாவிஷ்ணு, காளியம்மாள். இவர்களுக்கு சாகீப்தியா என்ற ஒன்றரை வயது பெண் குழந்தை இருந்தது. இந்நிலையில் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த சாகீப்தியா அருகில் தண்ணீர் நிரப்பப்பட்ட அன்ன கூடையில் தலைக்குப்புற விழுந்துள்ளார். இதனை பார்த்த உறவினர்கள் மீட்டு அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். வீட்டில் விளையாடிய குழந்தை நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.




Tags:    

Similar News