உள்ளூர் செய்திகள் (District)

உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா

Published On 2022-12-09 09:08 GMT   |   Update On 2022-12-09 09:08 GMT
  • உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா நடைபெற்றது
  • ஊராட்சி மன்ற தலைவர் தொடங்கி வைத்தார்

புதுக்கோட்டை:

கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றியம் கல்லாக்கோட்டை ஊராட்சியில் உள்ள பந்துவா கோட்டையில் கிராம மக்களுக்கு மனநலம் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் பவுன்ராஜ் தலைமை தாங்கினார், துணைத் தலைவர் ஜுல் பிகார் அலி முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் ஸ்கார்ப் இந்திய களப்பணியாளர் கவிதா மனநலம் பற்றியும், மனநலம் ஏன் பாதிக்கப்படுகிறது என்பதையும், அதனை தடுப்பது பற்றியும், மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவசமாக மருத்துவம் எடுத்துக் கொள்வது பற்றியும், மாற்றுத்திறனாளி அட்டை பெற்று தருதல், உதவித்தொகை பெறுவது பற்றியும் எடுத்துக் கூறினார். நிகழ்ச்சியில் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டு பல்வேறு விளக்கங்கள் பெற்றுச் சென்றனர்.

Tags:    

Similar News