உள்ளூர் செய்திகள்

வாகனம் மோதி விவசாயி பலி

Published On 2023-06-04 06:15 GMT   |   Update On 2023-06-04 06:15 GMT
  • வாகனம் மோதி விவசாயி இறந்தார்.
  • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 புதுக்கோட்டை:

அரிமளம் ஒன்றியம், மிரட்டு நிலை அருகே தெற்குபொன்னம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பாண்டியன் (வயது 43)விவசாயி. இவர் சம்பவத்தன்று தெற்குபொன்னம்பட்டியில் இருந்து நடைபயிற்சி மேற்கொண்டிருந்தார். அப்போது மருதன்பட்டி பஸ் நிறுத்தம் அருகே வந்த போது, அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் பாண்டியன் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பாண்டியன் மனைவி ஆராயி கொடுத்த புகாரின் பேரில் அரிமளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News