ஊராட்சி ஒன்றிய பள்ளியில் மாநிலங்களவை உறுப்பினர் ஆய்வு
- ஊராட்சி ஒன்றிய பள்ளியில் மாநிலங்களவை உறுப்பினர் ஆய்வு செய்தார்.
- உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றர்
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை நகராட்சி பகுதிகளில் நாடாளுமன்ற உறுப்பினர் நிதியில் கட்ட பட்ட சிறு மின்விசை குடிநீர் தொட்டிகளை திறந்து வைக்க வருகை தந்த மாநிலங்களவை உறுப்பினர் அப்துல்லா சமுத்துவ புரத்தில் தற்காலிகமாக கட்டப்படவுள்ள பஸ் நிறுத்த இடத்தை பார்வையிட்டார். அதன்பின்னர் முன்னாள் முதல்வர் கருணாநிதி 1996ல் துவக்கி வைத்த ஊராட்சி ஒன்றிய தொடக்க ப்பள்ளியில் ஆய்வு மேற்க்கொண்டார். அப்போது அப்பள்ளி ஆசிரியர்கள் பாம்பு தொல்லை இருப்பதாகவும், அதே போல் குடிதண்ணீர் பிரச்சினை உள்ளது எனவும், பள்ளிக்கு சுற்றுசுவர் கட்டி தரவேண்டும் என கோரிக்கை வைத்தனர். பார்வையிட்ட எம்பி உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றர். பள்ளி மாணவ, மாணவிகள் எம்பிக்கு விடுகதை போட்டு விடை கேட்டு ஆச்சரியபடுத்தினர். ஆய்வின் போது புதுக்கோட்டை நகராட்சி ஆணையர் நாகராஜன், பொறியாளர் சேகரன், நகர்மன்ற உறுப்பினர்கள் மதியழகன், சுப.சரவணன், பழனிவேல், மற்றும் பள்ளி தலைமையாசிரியர் ரூபஸ் சாந்தகுமார், பள்ளி ஆசிரியை சத்யா, ஐடி விங்க் இதயம் அப்துல்லா உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.