உள்ளூர் செய்திகள்

வாலிபருக்கு ஆயுள் சிறை தண்டனை

Published On 2023-03-17 06:30 GMT   |   Update On 2023-03-17 06:30 GMT
  • வாலிபருக்கு ஆயுள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது
  • சிறுமிக்கு பாலியல் வன் கொடுமை

புதுக்கோட்டை:

கிருஷ்ணகிரிைய சேர்ந்தவர் அரசு (வயது 22). இவர் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரு தனியார் பேக்கரியில் வேலை செய்து வந்தார். கடந்த 2020-ல் 15 வயது சிறுமியை திருமணம் செய்து ெகாள்வதாக கூறி அவரை கடத்திச் ெசன்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது குறித்து திருமயம் அனைத:து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அரசை கைது செய்தனர். புதுக்கோட்டை மகளிர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்த இந்த வழக்கில் நீதிபதி தீர்ப்பளித்தார். அதில், பாலியல் வன்கொடுமை செய்த அரசுக்கு ஆயுள் சிறை தண்டனையும், ரூ.2.5 லட்சம் அபராதமும் விதித்து அபராதத் தொகைகயை சிறுமிக்கு வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.

Tags:    

Similar News