உள்ளூர் செய்திகள்

மது விற்றவர் கைது

Published On 2023-06-07 06:45 GMT   |   Update On 2023-06-07 06:45 GMT
  • மது விற்றவர் கைது செய்யப்பட்டார்.
  • இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுக்கோட்டை:

வடகாடு அருகே வாணக்கன்காட்டில் உள்ள டாஸ்மாக் கடையின் அருகேயுள்ள பாரில் நேற்று சட்டவிரோதமாக மது விற்பனை நடந்து வந்துள்ளது. ஆலங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு தீபக்ரஜினி மற்றும் போலீசார் அப்பகுதியில் நடத்திய ஆய்வில், சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டு வந்த வாணக்கன்காடு பகுதியை சேர்ந்த பரிமளம் (வயது 49) என்பவரை கைது செய்தனர். பின்னர் அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். அப்போது வரும் வழியில், அப்பகுதியில் அனுமதியின்றி பார் நடத்தி வரும் அதே பகுதியை சேர்ந்த தி.மு.க. மாவட்ட பிரதிநிதியும், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரும், அவரது மகனும் சேர்ந்து போலீசாரை வழிமறித்து பிரச்சினையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.



Tags:    

Similar News