- ஆலங்குடியில் மருத்துவ முகாம் நடைபெற்றது
- இந்த முகாமில் மூட்டு வலி, இடுப்பு வலி, தோல் நோய்கள், சைனஸ் சர்க்கரை நோய் ஆகியவற்றிற்கு இலவசமாக சிகிச்சை அளிக்கப்பட்டது
ஆலங்குடி:
ஆலங்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆலங்குடி மருத்துவமனை, சித்த மருத்துவ பிரிவு, அரசு ஊராட்சி ஒன்றியப்பள்ளி சார்பில் மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமிற்கு பேரூராட்சி தலைவர் ராசி முருகானந்தம் தலைமை வகித்தார். இதில் செயல் அலுவலர் பாலசுப்பிரமணியன், பனையப்பன் மற்றும் சித்த மருத்துவர் மணிவண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த முகாமில் மூட்டு வலி, இடுப்பு வலி, தோல் நோய்கள், சைனஸ் சர்க்கரை நோய் ஆகியவற்றிற்கு இலவசமாக சிகிச்சை அளிக்கப்பட்டது.
ஆலங்குடி அரசு மருத்துவமனை சித்த மருத்துவர் டாக்டர் மணி வண்ணன் மற்றும் பரம்பூர் சித்த மருத்துவர் டாக்டர் சுயமரியாதை ஆகியோர் சிகிச்சை அளித்தனர். இதில் பீட்டர் குமார், துப்புரவு மேற்பார்வையாளர் ராஜேந்திரன் இலவச கசாய குடிநீர் மற்றும் சித்த மருந்துகளை வழங்கினர். முகாமில் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயனடைந்தனர். இதற்கான ஏற்பாடுகளை ஆலங்குடி பேரூராட்சி நிர்வாகம் செய்திருந்தது.