உள்ளூர் செய்திகள் (District)

கந்தர்வகோட்டை அருகே மருத்துவ முகாம்

Published On 2023-02-26 06:32 GMT   |   Update On 2023-02-26 06:32 GMT
  • கந்தர்வகோட்டை அருகே மருத்துவ முகாம் நடைபெற்றது
  • இதில் இரத்த அழுத்தம், கண் சிகிச்சை, காசநோய் கண்டறிதல் உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் செய்யப்பட்டு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டது.

கந்தர்வகோட்டை:

கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றியம் நெப்புகை ஊராட்சி முள்ளிக்காப்பட்டி கிராமத்தில் தமிழக அரசின் மக்களைத் தேடி மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் முல்லை ஆறுமுகம் தலைமை தாங்கினார். முகாமில் வட்டார மருத்துவ அலுவலர் மணிமாறன், நடமாடும் மருத்துவக் குழு மருத்துவர் சசிவர்மன் தலைமையிலான மருத்துவக் குழுவினர் முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு சிகிச்சை அளித்தனர். இதில் இரத்த அழுத்தம், சர்க்கரை பரிசோதனை, கண் சிகிச்சை, காசநோய் கண்டறிதல் உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் செய்யப்பட்டு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டது. முகாமில் நம்புரான் பட்டி ஊராட்சி மன்ற தலைவர் மதியழகன், நடுப்பட்டி தலைவர் சந்திரசேகரன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். இதில் சுற்றுவட்டார கிராம பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.


Tags:    

Similar News