- தேசிய ஒற்றுமை தின விழா நடந்தது
- வருவாய் துறை சார்பில் நடந்தது
புதுக்கோட்டை
கந்தர்வகோட்டை வருவாய் துறை மற்றும் ஊரக வளர்ச்சி துறை சார்பில் ஒற்றுமை தின நாள் விழா கொண்டாடப்பட்டது. இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்த நாளை ஒவ்வொரு ஆண்டும் ஒற்றுமை தின நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. கந்தர்வகோட்டை வருவாய் துறை சார்பில் கந்தர்வகோட்டை மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கலந்து கொண்ட ஒற்றுமை நாள் ஓட்டத்தை வட்டாட்சியர் ராஜேஸ்வரி தொடங்கி வைத்தார். பேருந்து நிலையத்தில் தொடங்கிய ஒற்றுமை நாள் ஓட்டம் பள்ளி வளாகத்தில் நிறைவடைந்தது. நிகழ்ச்சியில் வருவாய்த்துறை அலுவலர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், உதவியாளர்கள், பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஆணையர் ஸ்ரீதரன், திலகவதி தலைமையில் ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் ஒற்றுமை நாள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.