உள்ளூர் செய்திகள் (District)
ஆலங்குடி அருகே லாரி மோதி முதியவர் பலி
- ஆலங்குடி அருகே லாரி மோதி முதியவர் பலியானார்
- சம்பவம் குறித்து ஆலங்குடி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் நதியா வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
ஆலங்குடி:
ஆலங்குடி அருகே உள்ள திருவரங்குளம் அழகப்பா நகரை சேர்ந்த முத்து (வயது 65 ). இவர் கடை வீதியி ல் சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்தார். அப் போது ஆலங்குடியில் இருந்து புதுக்கோட்டையை நோக்கி சென்ற லாரி இவர் மீது மோதியது. இதில் மோதி படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் உதவியுடன் அனுப்பிவைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி முத்து பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவம் குறித்து வந்த புகாரின் பேரில் ஆலங்குடி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் நதியா வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறா ர்.