உள்ளூர் செய்திகள் (District)

இரு மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒருவர் பலி

Published On 2023-03-11 07:19 GMT   |   Update On 2023-03-11 07:19 GMT
  • 4 பேர் படுகாயம் அடைந்த நிலையில் ஒருவர் உயிரிழந்தார்
  • உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

ஆலங்குடி.

புதுக்கோட்டை அருகே உள்ள பெருங்களூரைச் சேர்ந்த காட்டுப்பட்டி விகாஷ் (வயது 20) அதே பகுதியைச்சேர்ந்த கிருபாநிதி (வயது 20) ஆகிய இருவரும் ஆலங்குடி வழியாக அறந்தாங்கியை நோக்கி சென்று கொண்டிருந்தனர்.அப்போது ஆலங்குடி அருகில் உள்ள தெற்கு பார்த்தம்பட்டியை சேர்ந் ந்த விக்னேஷ் (வயது 19)அதே பகுதியை சேர்ந்த சரவணன் (வயது 27) ஆகிய இருவரும் அறந்தாங்கி சாலையில் தெற்கு பாத்தம்பட்டி யை நோக்கி வந்து கொண்டிருந்தனர்.இந்நிலையில் இருவரும் ஓட்டி வந்த இரு மோட்டார் சைக்கிளும் அ ண்ணாநகர் பாலம் அருகில் சென்ற போது நேருக்கு நேர் மோதி வி பத்துக்குள்ளானது .இதில் நான்கு பேரும் தூக்கி வீசப்பட்டு இரத்த காயங்களுடன் புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவம னையில் சேர்த்தனர்.இதைத் தொடர்ந்து நான்கு பேரில் ஆலங்குடி அருகே உள்ள வடக்கு பார்த்தம்பட்டியை சேர்ந்த மாரிமுத்து மகன் சரவணன் (வயது 27) இவ ர் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இறந்தார்.இவரது உடல் மருத்துவமனையில் பிரேத பரிசோதனை க்கு வைக்கப்பட்டது.பின்னர் இறந்த சம்பவம் குறித்து ஆலங்குடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர் தகவலின் பேரில் ஆலங்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக் டர் நதியா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News