உள்ளூர் செய்திகள் (District)

படத்திறப்பு விழா

Published On 2022-10-12 09:08 GMT   |   Update On 2022-10-12 09:08 GMT
  • படத்திறப்பு விழா நடைபெற உள்ளது
  • நாளை மறுநாள் நடைபெறுகிறது

புதுக்கோட்டை

சவரிமுத்து அருள்தாஸ் நினைவு அறக்கட்டளையின் முதன்மை இயக்குனர் ஏ.சி.ரவிச்சந்திரன் தாயார் சந்திரா அம்மாள் படத்திறப்பு விழா குடுமியான்மலையில் நாளை மறுநாள் நடக்கிறது.

சவரிமுத்து அருள்தாஸ் நினைவு அறக்கட்டளையின் மேலாண்மை இயக்குனரும் முதன்மை செயலாக்க திட்ட இயக்குனருமான ஆன்மீக ரத்னா டாக்டர் ஏ.சி.ரவிச்சந்திரனின் தாயாரும், அருள்தாஸின் மனைவியுமான சந்திரா அம்மையார் சமீபத்தில் உயிர் நீத்தார்.

அம்மையாரது 30-வது நாள் நினைவு அனுசரிப்பும் , அம்மையாரின் படத்திறப்பு விழாவும் நாளை மறு நாள் (வெள்ளிக் கிழமை) காலை 10 மணியளவில் புதுக்கோட்டை மாவட்டம் குடுமியான்மலையில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறுகின்றது.

தொடர்ந்து அங்குள்ள திருமண மண்டபத்தில் விருந்து உபசரிப்பு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

இந்நிகழ்வில் சர்வக்கட்சி பிரமுகர்கள், அரசு அதிகாரிகள், சவரிமுத்து அருள்தாஸ் நினைவு அறக்கட்டளையின் செல்லர்கள், கோ- செல்லர்கள், அடிசனல் பண்டர்கள், பயனாளர்கள்ஏ ராளமானோர் பங்கேற்க உள்ளனர்.

இதற்கான ஏற்பாடுகளை அறக்கட்டளை மேலாண்மை

இயக்குனர் ஏ.சி.ரவிச்சந்திரன் ஆலோசனையின் பேரில் குடுன்பத்தினரும், அறக்கட்டளை நிர்வாகிகளும் செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News