உள்ளூர் செய்திகள்

விராலிமலை பகுதியில் நாளை மின்தடை

Published On 2023-05-08 08:32 GMT   |   Update On 2023-05-08 08:32 GMT
  • விராலிமலை பகுதியில் நாளை மின்தடை ஏற்படும்
  • காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது

விராலிமலை:

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை மற்றும் வடுகபட்டி துணை மின் நிலையத்தில் நாளை (9.5.2023, செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் மின் வினியோகம் நிறுத்தப்படுகிறது. விராலிமலையில் இருந்து மின் விநியோகம் பெறும் விராலூர், மலைக்குடிப்பட்டி, ராஜாளிபட்டி, கொடும்பாளூர், விட்டமம்பட்டி, பாட்னாப்பட்டி, கவரப்பட்டி, செவல்பட்டி, பொய்யாமணி, நம்பம்பட்டி, கோமங்கலம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என விராலிமலை மின்சார வாரிய செயற்பொறியாளர் சுப்பிரமணியன் அறிவித்துள்ளார். இதற்கிடையே விராலிமலை ஸ்ரீ மெய்க்கண்ணுடையாள் கோவில் திருவிழாவை முன்னிட்டு விராலிமலை நகர் பகுதியில் தொடர்ந்து மின் விநியோகம் இருக்கும் என்றும் மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

Tags:    

Similar News