உள்ளூர் செய்திகள்

திருமணம் செய்த காதல் ஜோடி போலீஸ் நிலையத்தில் தஞ்சம்

Published On 2022-06-22 08:37 GMT   |   Update On 2022-06-22 08:37 GMT
  • திருமணம் செய்த காதல் ஜோடி போலீஸ் நிலையத்தில் தஞ்சமடைந்தனர்.
  • காதல் திருமணத்தில் உடன்பாடு இல்லை

புதுக்கோட்டை:

ஆலங்குடி அருகே உள்ள மழையூர் காவல் நிலையத்தில் துவார் அ டுத்த கீழே வாண்டான்விடுதியை சேர்ந்த ரெங்கசாமி மகள் கவிதா. இவரும் அதே பகுதியை சேர்ந்த திருப்பூரில் கூலி வேலை செய்து வரும் செல்லக்கண்ணும் (வயது 24) காதலித்து வந்துள்ளனர்.

இந்த விஷயம் வீட்டிற்கு தெரிந்தால் காதலுக்கு எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என்று நினைத்த அவர்கள், திருப்பூர் ஐயப்பன் கோவில் செய்து கொண்டனர். இதற்கிடையே தனது மகளை காணவில்லை என்று கவிதாவின் பெற்றோர்மழையூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

இதனை அறிந்த அவர்கள் உடனடியாக தாங்களால் ஏதும் பிரச்சனை ஏற்படும் என்ற அச்சத்தில் நேற்று ஆலங்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர்.

ஆலங்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் சப்-இன்ஸ்பெக்டர் மகாலெட்சுமி இருதரப்பு பெற்றோர்களு க்கும் தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து வந்த இருதரப்பு பெற்றோர்களும் காதல் திருமணத்தில் உடன்பாடு இல்லை என்று கூறி சென்றுவிட்டதால்,

காதல் ஜோடி வயதை காரணம்காட்டி போலீசார் காதல் ஜோடிக்கு அறிவுரை கூறி அனுப்பிவைத்தனர்.

Tags:    

Similar News