உள்ளூர் செய்திகள்

சத்தியமூர்த்தி பெருமாள் கோவில் வைகாசி திருவிழா

Published On 2023-05-29 07:35 GMT   |   Update On 2023-05-29 07:35 GMT
  • சத்தியமூர்த்தி பெருமாள் கோவில் வைகாசி திருவிழா நடைபெற்றது.
  • 4-ந் தேதி தேரோட்டம் நடக்கிறது.

புதுக்கோட்டை:

திருமயம் சத்தியமூர்த்தி பெருமாள் கோவிலில் வைகாசி திருவிழா கடந்த 26-ந் தேதி தொடங்கியது. இதனை தொடர்ந்து 27-ந் தேதி கொடியேற்றம் நடைபெற்றது. இதையடுத்து மண்டகபடிதாரர்கள் சார்பில் ஒவ்வொரு நாளும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்று வீதிஉலாவும் நடைபெற்று வருகிறது. நேற்று இரவு சிறப்பு அலங்காரத்தில் சத்தியமூர்த்தி பெருமாள் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து 30-ந் தேதி திருமஞ்சனம் நடைபெற்று கருட வாகனத்தில் சத்தியமூர்த்தி பெருமாள் வீதி உலா நடக்கிறது. 4-ந் தேதி தேரோட்டம் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News