உள்ளூர் செய்திகள்

மவுண்ட் சீயோன் பொறியியல், தொழில்நுட்பக் கல்லூரியில் விளையாட்டு போட்டிகள்

Published On 2023-05-05 06:22 GMT   |   Update On 2023-05-05 06:22 GMT
  • போட்டியில் வெற்றி பெற்ற அனைவருக்கும் பரிசு வழங்கப்பட்டது
  • மவுண்ட் சீயோன் பொறியியல், தொழில்நுட்பக் கல்லூரியில் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது

புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மவுண்ட சீயோன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 22வது ஆண்டு விழா போட்டியின் தொடக்கவிழா கல்லூரி வளாகத்தில் வெகு விமரிசையாக நடைப்பெ ற்றது.டீன் முனைவர் எஸ்.ராபின்சன் வரவேற்பு ரையாற்றினார். கல்வி நிறுவனத்தின் தலைவர் பிளாரன்ஸ் ஜெயபரதன் ஒலிம்பிக் கொடியையும், இயக்குநர் முனைவர் ஜெய்சன் கீர்த்தி ஜெயபரதன் தேசிய கொடியையும் ஏற்றினர். இறுதியாக கல்லூரி முதல்வர் முனைவர் பாலமுருகன் கல்லூரி கொடியை ஏற்றி வைத்தார்.

தலைவர் பிளாரன்ஸ் ஜெயபரதன் ஆண்டுவிழா போட்டியை தொடங்கி வைத்தார். ஒலிம்பிக் ஜோதியை நான்கு ஹவுஸ் கேப்டன்கள் மற்றும் எமரால்டு குழுவினர் ஏந்திச் சென்று, ஒலிம்பிக் ஜோதி பீடத்தில் வைத்தனர்.மின்னியில் மற்றும் மின்னணு பொறியியல் துறைத் தலைவர் டி.திவ்ய பிரசாத் வரவேற்புரையாற்றினார். மவுண்ட் சீயோன் கல்வி நிறுவனத்தின் தலைவர் பிளாரன்ஸ் ஜெயபரதன் தலைமையுரையாற்றினார்.

இயக்குநர் டாக்டர். ஜெய்சன் கீர்த்தி ஜெயபரதன், கல்வி ஒருங்கிணைப்பாளர் விவியன் ரேச்சல் ஜெய்சன், முதல்வர் முனைவர் பி.பாலமுருகன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.விழாவில் சிறப்பு விருந்தினராக தஞ்சாவூர் மாமன்னன் ராஜராஜ சோழன் அறக்கட்டளை நிறுவனரும், முன்னாள் சர்வதேச கூடைப்பந்து நடுவர் முனைவர் ரமேஷ்குமார் துரைராஜு கலந்து கொண்டு சிறப்புரை யாற்றினார்.மாணவர்கள் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர். பல கட்டங்களாக நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. கட்டமைப்பு பொறியியல் துறை தலைவர் ராதா நன்றியுரை ஆற்றினார்.

Tags:    

Similar News