உள்ளூர் செய்திகள்

மாநில கல்வி கொள்கை கலந்தாய்வு கூட்டம்

Published On 2022-10-08 08:42 GMT   |   Update On 2022-10-08 08:42 GMT
  • மாநில கல்வி கொள்கை கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
  • கல்வித்துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்

புதுக்கோட்டை

மாநிலகல்விக் கொள்கையின் கலந்தாய்வுக் கூட்டம் புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக வளாகத்தில் உள்ள தேர்வுக்கூட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி மணிவண்ணன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் ஆசிரியர் சங்கங்களை சேர்ந்த மாநில, மாவட்ட நிர்வாகிகள், கல்வியாளர்கள், தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனத்தினர், பெற்றோர்கள் கலந்து கொண்டு மாநில கல்விக் கொள்கையில் இடம் பெற வேண்டிய தங்களது கருத்துகளை மனுவாக அளித்தும், கோரிக்கை வைத்தும் பேசினர். கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துக்கள், மனுக்கள் அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும் என மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி மணிவண்ணன் கூறினார். கூட்டத்தில் கல்வித்துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்

Tags:    

Similar News