உள்ளூர் செய்திகள் (District)

பேருந்து படியில் நின்று பயணம் செய்யும் மாணவர்கள்

Published On 2022-11-04 09:21 GMT   |   Update On 2022-11-04 09:21 GMT
  • பேருநது படியில் நின்று கொண்டு மாணவர்கள் பயணம் செய்கின்றனர்.
  • நடவடிக்கை எடுக்க பொதுமக்கள்கோரிக்கை

புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அரசு போக்குவரத்து பணிமனையில் இயக்கப்படும் பேருந்துகளில் பயணம் செய்யும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் காலை, மாலை இருவேளையும் பேருந்து உள்ளே செல்லாமல் படியில் தொங்கியபடி பள்ளி கல்லூரிக்கு சென்று வருகின்றனர்.பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர் படியில் நிற்காமல் உள்ளே செல்லுமாறு கூறியும், மாணவர்கள் அவற்றை காதில் வாங்கிக் கொள்ளாமல் தனது ஆபத்தான பயணத்தை படிக்கட்டில் தொங்கியபடியே செல்கின்றனர்.

இப்படி ஆபத்தை உணராமல் படியில் தொங்கி செல்வதால் தவறி விழுந்து விடுவார்களோ என்று பொதுமக்கள் மற்றும் பயணிகள் அச்சத்துடன் பயணம் மேற்கொள்ள நேரிடுகிறது. நடத்துனர், ஓட்டுநர்களும் மாணவர்கள் நலன் கருதி பேருந்தை மெதுவாக பள்ளம் மேடு பார்த்து இயக்கிவருகின்றனர்.

எனவே சம்பந்தப்பட்ட அரசு துறை அதிகாரிகள் கவனத்தில் கொண்டு அசம்பாவிதம் ஏற்ப்படும் முன்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போக்குவரத்து துறை ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags:    

Similar News