கோடை உழவு நன்ைம தரும்-புதுக்கோட்டை மேலாண்மை இணை இயக்குனர் ஆலோசனை
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் மா.பெரியசாமி கோடை உழவு குறித்து கூறும்போது, கோடை மழையை பயன்படுத்தி நிலத்தை நன்கு உழவு செய்வதால் நன்மைகள் பல கிடைக்கும்.கோடை உழவு செய்வதால் மேல் மண் துகள்களாகிறது. இதனால்நி லத்தில் நீர் இறங்கும் திறன் அதிகரிக்கும். கோடை உழவு செய்வதால் மண்ணில் நல்ல காற்றோட்டம் கிடைப்ப தனால் மண்ணில் நுண்ணுயிரிகளின் செயல்பாடு அதிகமாகி மண்வளம் பெருகும். வயலி லுள்ள கோரை போன்ற களைகள்,கோடை உழவு செய்வதனால்மண்ணின் மேற்பரப்புக்குக் கொண்டு வரப்பட்டு சூரிய வெப்பத்தில் நன்கு காய்ந்து கட்டுப்படுத்தப்படுகிறது.
கோடை உழவு செய்வ தனால் நிலத்தினடியில் உள்ள கூண்டுப் புழுக்கள் மற்றும்தீமை செய்யும் பூச்சிகள் வெளியில் கொண்டு வரப்பட்டு அழிக்க ப்படுகிறது. மிக முக்கியமாக மக்காச்சோளத்தை தாக்கும்அமெரிக்க படைப்புழுவினை கட்டு ப்படுத்திட கோடை உழவு மிகவும் சிறந்தது . இதனால் வரும் பருவத்தில் பூச்சி நோய்த் தாக்குதல் பெருமளவு குறைகிறது.கோடை உழவினைச் சரிவிற்குக் குறுக்கே உழவு செய்து மண் அரிப்பினை தவிர்க்கலாம்.
கோடை உழவு செய்யாத நிலத்தில் நீர் வேகமாக வழிந்தோடி மண் அரிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. வயல்வெளிகளில் பெய்யும் மழை நீரை சேமிப்பதில் கோடை உழவு முக்கிய பங்கு வகிக்கிறது.இவ்வாறு பல நன்மைகள் கோடை உழவினால் ஏற்படுவதால் 'கோடை உழவு கோடி நன்மை" எனக் கூறப்படுகிறது. எனவே,புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள்; கோடையில் பெறப்படும் மழையினைப் பயன்படுத்தித் தங்களது நிலங்களில் மழை நீரை சேமித்திடவும்ரூபவ் பூச்சி நோய் ஆகியவற்றை கட்டுபடுத்திடவும் கோடை உழவு செய்து பயன்பெ றுமாறு புதுக்கோட்டை வேளாண்மை இணை இயக்குநர் மா.பெரியசாமி ஆலோசனை தெரிவித்துள்ளார்.