உள்ளூர் செய்திகள் (District)
- விஷம் குடித்த வாலிபர் உயிரிழந்தார்
- குடும்பத்தில் கருத்து வேறுபாடு
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி டவுன் தென்னகர் பகுதியைச் சேர்ந்தவர் பத்மநாதன். (வயது 35) இவருக்கு திருமணம் ஆகி 3 குழந்தைகள் உள்ளன. குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மனம் விரக்தியில் இருந்து பத்மநாதன், விஷம் குடித்து மயங்கியுள்ளார். உடனே அவரை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உறவினர்கள் சேர்த்தனர் ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து கறம்பக்குடி காவல் நிலைய உதவி ஆய்வாளர் ரவி வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.