உள்ளூர் செய்திகள் (District)

அரிசி ஆலையில் கூலித்தொழிலாளி சாவு

Published On 2022-10-05 08:23 GMT   |   Update On 2022-10-05 08:25 GMT
  • அரிசி ஆலையில் கூலித்தொழிலாளி உயிரிழந்தார்
  • மயங்கி கீழே விழுந்தார்

புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம் பி.குளவாய்ப்பட்டி சேர்ந்த ஆரோக்கியசாமி மகன் அருள் அலெக்ஸ் (வயது40). இவர் ஆலங்குடி தனியார் அரிசி ஆ லையில் கூலித்தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவர், சம்பவத்தன்று மயங்கி கீழே விழுந்தார். இதைப்பார்த்த சக கூலித்தொழிலாளிகள், அவரை மீட்டு ஆலங்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே அலெக்ஸ் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து ஆலங் குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News