உள்ளூர் செய்திகள்

ரூ.1.88 கோடியில் மின் மயானம்

Published On 2023-10-11 06:16 GMT   |   Update On 2023-10-11 06:16 GMT
  • கறம்பக்குடி பேரூராட்சியில் ரூ.1.88 கோடியில் மின் மயானம்
  • பேரூராட்சி தலைவர் பூமிபூஜையுடன் பணிகளை தொடங்கி வைத்தார்

கறம்பக்குடி, 

புதுக்கோட்டை மாவ ட்டம் கறம்பக்குடி பேரூரா ட்சியில் 15 வார்டுகள் உள் ளன. கறம்பக்குடியில் மின் மயானம் அமைக்க வேண் டும் என்று பொதுமக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்தனர்.

பொதுமக்களின் கோரிக் கையை ஏற்று நகர்புற அமைச்சர் ஒப்புதலோடு மின் மயானம் அமைக்க அறிவிக்கப்பட்டது.

அதன்படி தமிழ்நாடு நகர் புற வளர்ச்சி திட்டத்தின் கீழ் கறம்பக்குடி பேரூராட்சியில் ரூபாய் ஒரு கோடியே 88 லட்சம் மதிப்பில் மின் மயானம் அமைக்கும் பணி 5-வது வார்டு பகுதியில் தட்டபூரணி செல்லும் சாலையில் ஏற்கனவே உள்ள மயானம் அருகே மின்மயானம் அமைப்பத ற்கான பணியை பூமி பூஜை யுடன் கறம்பக்குடி பேரூரா ட்சி தலைவர் முருகேசன் தலைமை வகித்து தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் பேரூராட்சி செயல் அலுவலர் கார்த்தி கேயன், பேரூராட்சி துணைத் தலைவர் நைனா முகமது மற்றும் பேரூராட்சி வார்டு கவுன்சிலர்கள் கரு ப்பையா, முருகேஸ்வரி, செண்பகவல்லி, வளர்மதி, ஜன்னத் பேகம், பரக்கத் நிஷா, ராஜா, மஞ்சுளா தேவி, பரிதாபகம், ராஜ சேகர், ரங்கசாமி மங்கை யர்கரசி மற்றும் பேரூராட்சி இளநிலை உதவியாளர் சக்திவேல் அலுவலர்கள் பணியாளர்கள் அப்துல் லத்தீப், அப்துல் அலீம், சாதிக் பாஷா மற்றும் தூய்மை பணியாளர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News