உள்ளூர் செய்திகள்

கோவில்பட்டியில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கிய போது எடுத்த படம்.

கோவில்பட்டியில் மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கிய ரஜினி ரசிகர்கள்

Published On 2022-12-13 09:46 GMT   |   Update On 2022-12-13 09:46 GMT
  • நடிகர் ரஜினிகாந்தின் 73-வது பிறந்த நாளை ரசிகர்கள் கல்வித் திருவிழாவாக கொண்டாடினர்.
  • மாணவ, மாணவிகளுக்கு ரஜினி ரசிகர்கள் கல்வி உபகரணங்களை வழங்கினர்.

கோவில்பட்டி:

கோவில்பட்டியில் நடிகர் ரஜினிகாந்தின் 73-வது பிறந்த நாளை ரசிகர்கள் கல்வித் திருவிழாவாக கொண்டாடி மகிழ்ந்தனர். ரஜினிகாந்தின் பிறந்த நாளை முன்னிட்டு வேலாயுதபுரம் அன்னை பத்திரகாளி அம்மன், காளியம்மன், கோவில் முன்பு நிகழ்ச்சி நடந்தது.

இதில் மாணவ, மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் மற்றும் அன்னதானம் வழங்கி ரசிகர்கள் கொண்டாடினர். இந்நிகழ்ச்சியில் நகர ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்ற ஜோதி காமாட்சி வரவேற்றார். விழாவிற்கு நகர ரசிகர் மன்ற நிர்வாகியும் தொழிலதிபருமான சீனிவாசன் தலைமை தாங்கினார்.

நகர இணைச் செயலாளர் சந்திரசேகரன் ஒன்றிய ரசிகர் மன்ற பாண்டியராஜ், வேலாயுதபுரம் முருகன், புதுக்கிராமம் மகேஷ் பாலா, ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட இணை செயலாளர் தவமணி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பள்ளி மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். கோவில்பட்டி நகர ரஜினிகாந்த் ரசிகர் மன்ற ஜெயக்கொடி, ஐக்கிய அரபு அமீரக பொறுப்பாளர் பொன்முருகன் ஆகியோர் அன்னதான நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர்.

நிகழ்ச்சியில் ரசிகர் மன்ற இந்து ராஜ், கனிராஜன், சண்முகராஜ், ஆறுமுகசாமி, மேரி, நிர்வாகிகள் முருகன், மகாலிங்கம், பாலமுருகன், ஆறுமுகசாமி, கனகவேல், ஜெயராம், குமார், பாண்டியராஜன், அண்ணாமலை உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News