உள்ளூர் செய்திகள்

"தமிழைத் தேடி" பயணத்திற்காக இலட்சினையை ராமதாஸ் வெளியிட்டார்

Published On 2023-01-31 10:10 GMT   |   Update On 2023-01-31 10:10 GMT
  • உலக தாய்மொழி நாளான பிப்ரவரி 21-ம் நாள் சென்னையில் தொடங்கும் இந்த பயணம் பிப்ரவரி 28-ம் நாள் மதுரையில் நிறைவடையவுள்ளது.
  • பா.ம.க. இணைப் பொதுச்செயலாளரும், முன்னாள் மத்திய மந்திரியுமான ஏ.கே.மூர்த்தி பெற்றுக் கொண்டார்.

சென்னை:

பா.ம.க. தலைமை நிலையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

பொங்குதமிழ் வளர்ச்சி அறக்கட்டளையின் சார்பில் தமிழ்நாட்டில் தமிழை வளர்த்தெடுப்பதற்கான தேவையை வலியுறுத்தி "தமிழைத் தேடி...'' என்ற தலைப்பில் பொங்குதமிழ் வளர்ச்சி அறக்கட்டளையின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் விழிப்புணர்வு பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.

உலக தாய்மொழி நாளான பிப்ரவரி 21-ம் நாள் சென்னையில் தொடங்கும் இந்த பயணம் பிப்ரவரி 28-ம் நாள் மதுரையில் நிறைவடையவுள்ளது. இந்த பயணத்திற்காக பொங்குதமிழ் வளர்ச்சி அறக்கட்டளை சார்பில் இலட்சினை தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த இலட்சினையை டாக்டர் ராமதாஸ் இன்று காலை வெளியிட்டார். இதனை பா.ம.க. இணைப் பொதுச்செயலாளரும், முன்னாள் மத்திய மந்திரியுமான ஏ.கே.மூர்த்தி பெற்றுக்கொண்டார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News