உள்ளூர் செய்திகள்
"தமிழைத் தேடி" பயணத்திற்காக இலட்சினையை ராமதாஸ் வெளியிட்டார்
- உலக தாய்மொழி நாளான பிப்ரவரி 21-ம் நாள் சென்னையில் தொடங்கும் இந்த பயணம் பிப்ரவரி 28-ம் நாள் மதுரையில் நிறைவடையவுள்ளது.
- பா.ம.க. இணைப் பொதுச்செயலாளரும், முன்னாள் மத்திய மந்திரியுமான ஏ.கே.மூர்த்தி பெற்றுக் கொண்டார்.
சென்னை:
பா.ம.க. தலைமை நிலையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-
பொங்குதமிழ் வளர்ச்சி அறக்கட்டளையின் சார்பில் தமிழ்நாட்டில் தமிழை வளர்த்தெடுப்பதற்கான தேவையை வலியுறுத்தி "தமிழைத் தேடி...'' என்ற தலைப்பில் பொங்குதமிழ் வளர்ச்சி அறக்கட்டளையின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் விழிப்புணர்வு பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.
உலக தாய்மொழி நாளான பிப்ரவரி 21-ம் நாள் சென்னையில் தொடங்கும் இந்த பயணம் பிப்ரவரி 28-ம் நாள் மதுரையில் நிறைவடையவுள்ளது. இந்த பயணத்திற்காக பொங்குதமிழ் வளர்ச்சி அறக்கட்டளை சார்பில் இலட்சினை தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த இலட்சினையை டாக்டர் ராமதாஸ் இன்று காலை வெளியிட்டார். இதனை பா.ம.க. இணைப் பொதுச்செயலாளரும், முன்னாள் மத்திய மந்திரியுமான ஏ.கே.மூர்த்தி பெற்றுக்கொண்டார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.