உள்ளூர் செய்திகள்

பணம் வைத்து சூதாடிய 16 பேர் கைது

Published On 2023-03-06 09:21 GMT   |   Update On 2023-03-06 09:21 GMT
  • கீழக்கரை அருகே பணம் வைத்து சூதாடிய 16 பேர் கைது செய்யப்பட்டனர்.
  • மேலும் அவர்களிடம் இருந்து ரூ.2 லட்சம்-கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

கீழக்கரை

ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாடசாமி தலைமையில் போலீசார் ரோந்து சென்றனர். அவர்கள் கீழக்கரை அருகே முள்ளுவாடி தனியார் ஆசிட் கம்பெனி அருகில் சென்றபோது பொது இடத்தில் சிலர் கும்பலாக அமர்ந்திருந்தனர்.

இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த இடத்திற்கு சென்று பார்த்தனர். அப்போது 16 பேர் 3 குழுக்களாக அமர்ந்து பணம் வைத்துசீட்டு விளையாடிக் கொண்டிருந்தனர்.

போலீசாரை பார்த்ததும் தப்பி ஒட முயற்சித்தவர்களை மடக்கி பிடித்தனர். அவர்களிடம் இருந்து ரூ.2 லட்சத்து 21 ஆயிரத்து 300 ரொக்கம், 2 கார்கள், 106 பிளாஸ்டிக் டோக்கன், 12 செல்போன்கள், வெள்ளை மற்றும் சிமெண்ட் கலர் தரை விரிப்பு ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பாக கீழக்கரை புதுத்தெருவை சேர்ந்த சதக் நிஜாம் (38), அப்பாஸ் அலி (52), ஆர்.எஸ்.மங்கலம் சனவெளி கலைச்செல்வன் (31), கீழக்கரை லெப்பை தெரு ஹசன் (42), ஓ.கரிசல்குளம் ராஜு (32), கீழக்கரை ஆடறுத்தான் தெரு இஸ்மாயில் (50), பருத்திக்கார தெரு உசேன் (50) சாயல்குடி சத்துரவல்லி நகர் நாகராஜ் (41), மண்டபம் ரெயில்வே தெரு முத்துராமன் (53), வேதாளை தெற்கு தெரு முகமது அலி ஜின்னா (42), ராமநாதபுரம் ஓம் சக்தி நகர் ராமர் (33), ஆர் எஸ் மங்கலம் நிஜந்தன் (26), உச்சிப்புளி வேலுச்சாமி (43), கடலாடி ராஜாங்கம் (42), சுந்தரமடையான் குமரேசன் ஆகிய 16 பேரை ஏர்வாடி தர்கா போலீசார் கைது செய்தனர்.

Tags:    

Similar News