உள்ளூர் செய்திகள் (District)

மானிய திட்ட கடன்களுக்கு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்

Published On 2023-05-25 08:52 GMT   |   Update On 2023-05-25 08:52 GMT
  • மானிய திட்ட கடன்களுக்கு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் பேசினார்.
  • எனவே வங்கி மேலாளர்கள் அரசு மானிய கடன் திட்டங்களுக்கான பெறக்கூடிய மனுக்களுக்கு சிறப்பு கவனம் எடுத்திட வேண்டும்.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட அளவிலான வங்கியாளர்களுடனான ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் விஷ்ணு சந்திரன் தலைமை யேற்று வங்கிகள் மூலம் பொதுமக்களுக்கு மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து கேட்டறிந்தார்.

அப்போது அவர் பேசியதாவது:-

அரசின் மானிய திட்டங்கள் வங்கியின் மூலம் பொது மக்களுக்கு சென்ற டைகின்றன. குறிப்பாக மாவட்ட தொழில் மையம் தாட்கோ, மாற்றுத்திறனாளி நலத்துறை, வேளாண்மைத்துறை, கால்நடை பராமரிப்பு துறை, மீன்வளத்துறை போன்ற துறைகள் மூலம் பொதுமக்களுக்கான கடன் திட்டங்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு உரிய கடன் தொகை வங்கிகள் மூலம் வழங்கப்ப டுகிறது. பொதுவாக மானிய கடன் திட்டங்கள் வங்கியின் மூலம் வழங்குவதால் தேர்வு செய்யப்பட்ட துறைகள் பயனாளிகளுக்கான மானிய தொகையினை விடுவிக்க பரிந்துரை செய்யப்படும். இதன் மூலம் கடன் பெறும் பயனாளிகள் கடன்களை திரும்பி செலுத்துவதற்கு ஏதுவாக இருக்கும்.வங்கிகளை பொறுத்த வரை பெறக்கூடிய மனுக்க ளை உடனுக்குடன் பரிசீ லனை செய்து பயனாளி களுக்கான கடன் தொகை யினை வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பொதுவாக தொழில் தொடங்க ஆர்வமுடன் வருபவர்களுக்கு நாம்உறுதுணையாக இருந்தால் தான் அவர்களின் முயற்சி மேலும் அதிகரிக்கும். எனவே வங்கி மேலாளர்கள் அரசு மானிய கடன் திட்டங்களுக்கான பெறக்கூடிய மனுக்களுக்கு சிறப்பு கவனம் எடுத்திட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இக்கூட்டத்தில் உதவி ஆட்சியர் (பயிற்சி) நாராயண சர்மா, நபார்டு வங்கி மேலாளர் அருண்குமார், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் கார்த்திகேயன் மற்றும் அரசு அலுவலர்கள், வங்கியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News