உள்ளூர் செய்திகள் (District)

குடும்பத்தை பிரிந்த முதியவர் சாவு

Published On 2022-09-13 08:09 GMT   |   Update On 2022-09-13 08:09 GMT
  • தொண்டியில் குடும்பத்தை பிரிந்த முதியவர் இறந்தார்.
  • முதியவருக்கு குடும்பத்தினர் இருந்தும் பேரூராட்சி பணியாளர்களைக் கொண்டு உடல் அடக்கம் செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

தொண்டி

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே பனஞ்சாயல் கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராஜன் (68). இவர் குடும்பத்தை விட்டு பிரிந்து தொண்டி பகுதியில் கடைகளில் பிச்சை எடுத்து சாப்பிட்டு பஸ் நிலையத்தில் உறங்கி வந்தார். இந்த நிலையில் முதியவர் கோவிந்தராஜன் பஸ் நிலையத்திலேயே இறந்தார். இதுகுறித்து பேரூராட்சி தலைவர் ஷாஜஹான் பானு ஜவஹர் அலிகான், கிராம உதவியாளர் அந்தோணிசேகருக்கு தகவல் தெரிவித்தார். தொண்டி போலீஸ் நிலையம் மற்றும் வருவாய்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இறந்தவரின் குடும்பத்திருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. இறந்தவரின் குடும்பத்தினர் முதியவர் உடலை அடக்கம் செய்ய முன் வராமல், தகவல் கொடுத்தவர்களிடம் நீங்களே அடக்கம் செய்யுங்கள் என்று கூறினார்களாம். இதையடுத்து பேரூராட்சி தலைவர், பணியாளர்களைக் கொண்டு தொண்டி பொது மயானத்தில் இந்து முறைப்படி முதியவரின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. முதியவருக்கு குடும்பத்தினர் இருந்தும் பேரூராட்சி பணியாளர்களைக் கொண்டு உடல் அடக்கம் செய்யப்பட்டது அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News