உள்ளூர் செய்திகள் (District)

மீனவர்கள் ஆர்ப்பாட்டம்

Published On 2022-12-02 07:50 GMT   |   Update On 2022-12-02 07:50 GMT
  • சாயல்குடி அருகே மீனவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
  • விசைப்படகு மீனவர்கள் மீது பலமுறை மனு கொடுத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று தெரிவித்தனர்.

சாயல்குடி

சாயல்குடி அருகே நரிப்பையூர் ஊராட்சி வேப்பமரத்து பனை கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட நாட்டுப் படகு மீனவர்கள் உள்ளனர். அவர்கள் நாட்டுப் படகில் கரைவலை வைத்து மீன்களை பிடித்து வருகின்றனர். நேற்று இரவு நாட்டுப்படகு மீனவர்களின் வலைகளை விசைப்படகு மீனவர்கள் சேதப்படுத்தி உள்ளனர். இதனைக் கண்ட நாட்டுப் படகு மீனவர்கள் வேப்பமரத்துப்பனை கடற்கரையோரம் வலைகளை வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது விசைப்படகு மீனவர்கள் மீது பலமுறை மனு கொடுத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மாவட்ட கலெக்டர் நாட்டுப் படகு மீனவர்களின் வாழ்வாதாரத்தை காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர்.

Tags:    

Similar News