உள்ளூர் செய்திகள் (District)

தண்ணீரில் மிதந்து சாதனை படைத்த சிறுவனுக்கு போலீஸ் சூப்பிரண்டு பாராட்டினார்.

தண்ணீரில் மிதந்து சாதனை: போலீஸ் சூப்பிரண்டு பாராட்டு

Published On 2022-06-22 08:32 GMT   |   Update On 2022-06-22 08:32 GMT
  • தண்ணீரில் மிதந்து சாதனை படைத்த சிறுவனுக்கு போலீஸ் சூப்பிரண்டு பாராட்டினார்.
  • தண்ணீரில் அதிக நேரம் மிதந்து ரெக்கார்டு புக் ஆப் இந்தியா புத்தகத்தில் புதிய சாதனை புரிந்துள்ளார்.

கீழக்கரை

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் இம்பாலா சுல்தான். இவரது மகன் இன்ஷாப் முகமது. கொடைக்கானல் கோடை இன்டர்நேஷனல் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறார்.

இவர் தண்ணீரில் அதிக நேரம் மிதந்து ரெக்கார்டு புக் ஆப் இந்தியா புத்தகத்தில் புதிய சாதனை புரிந்துள்ளார். உலக சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு கீழக்கரையில் முக்கிய பிரமுகர்கள் முன்னிலையில் சிறுவன் இம்பாலா இன்ஷாப் முகம்மது தண்ணீரில் யோகாசனம் செய்தார்.

1 மணி நேரத்திற்கு மேலாக மிதந்து சாதனை படைத்த சிறுவனை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கவேலு பாராட்டினார்.

Tags:    

Similar News