உள்ளூர் செய்திகள்

கீழக்கரையில் இலவச மருத்துவ முகாம்

Published On 2023-01-30 05:30 GMT   |   Update On 2023-01-30 07:12 GMT
  • கீழக்கரையில் இலவச மருத்துவ முகாம் நடந்தது.
  • பொது மக்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்து ஆலோசனைகள் வழங்கி மருந்து, மாத்திரை வழங்கினர்.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை ஹமீதியா தொடக்கப்பள்ளி வளாகத்தில் கீழக்கரை நகர் எஸ்.டி.பி. ஐ. கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் ஸ்ரீ மூகாம்பிகா மருத்துவக்கல்லூரி மருத்து வமனை இணைந்து இலவச சிறப்பு மருத்துவ முகாமை நடத்தியது.

கீழக்கரை மக்கள் சேவை அறக்கட்டளை நிறுவன தலைவர் உமர் அப்துல் காதர் தலைமை தாங்கி முகாமை தொடங்கி வைத்தார். சிறப்பு அழைப்பாளராக கீழக்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுரளி கலந்து கொண்டார். கீழக்கரை நகர் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் நிர்வாகிகள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

ஸ்ரீ மூகாம்பிகா மருத்துவ கல்லூரி மருத்துவமனை சார்பில் சரவணன் தலைமையில் குழந்தைகள் மருத்துவர் கவுதம், காது, தொண்டை, மூக்கு மருத்துவர் ஆரோபிண்டோ, கண் மருத்துவர் வடுலா கிருஷ்ணன், எலும்பு முறிவு மருத்துவர் யுவராஜன், பொது அறுவை சிகிச்சை மருத்துவர் நூருல் ஆயிஷா, பொது மருத்துவர் ப்ளெக்ஸ் நிதின், தோல் மருத்துவர் ஸ்ரீ பார்வதி ஆகியோர் கொண்ட மருத்துவ குழுவினர் பொதுமக்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்து ஆலோசனைகள் வழங்கி மருந்து, மாத்திரை வழங்கினர்.

முகாமிற்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஹசன் அலி, கீழக்கரை நகராட்சி கவுன்சிலர்கள் முகமது பாஷா, சகிலா பேகம், சித்திக், சமூக ஆர்வலர் அஜ்ஹர், ரோட்டரி கிளப் மரம் நடுதல் சேர்மன் சபீக். ம.ஜ.க. நிர்வாகி செய்யது இப்ராகிம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கீழக்கரை மற்றும் சுற்றுவட்டார பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு முகாமில் பயனடைந்தனர். அதனைத் தொடர்ந்து இந்திய தவ்ஹீத் ஜமாத் சார்பில் ராமநாதபுரம் மாவட்ட பொறுப்பாளர் எர்ணாகுளம் பஷீர் திருக்குர்ஆன் வழங்கினார்.

Tags:    

Similar News