உள்ளூர் செய்திகள்

ராமநாதபுரத்தில் தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு சார்பில் மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடந்தது,

தமிழக சிறைகளில் உள்ள முஸ்லீம்களை விடுதலை செய்ய வேண்டும்

Published On 2022-07-20 08:08 GMT   |   Update On 2022-07-20 08:08 GMT
  • தமிழக சிறைகளில் உள்ள முஸ்லீம்களை விடுதலை செய்ய வேண்டும் என்று தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பின் பொதுக்குழு கூட்டத்தில் வலியுறுத்தினர்.
  • மாவட்ட பொருளாளர் முஹம்மது கான் நன்றி கூறினார்.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு சார்பில் மாவட்டத் தலைவர் உமர் பாரூக் தலைமையில் ராமநாதபுரம் தனியார் அரங்கில் மாவட்ட பொதுக்குழு நடந்தது. மாவட்ட பேச்சாளர் பரக்கத் அலி தொடக்க உரையாற்றினார். சிறப்பு அழைப்பாளராக மாநிலத் துணைத்தலைவர் ஆல்பா நசீர், மாநிலச் செயலாளர் முஹம்மது பரூஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் 2023 ஜனவரி 8-ந்தேதி திருச்சியில் தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு சார்பாக நடைபெறவுள்ள மாமனிதர் நபிகள் நாயகம் (ஸல்) என்ற சிறப்பு மாநில மாநாட்டின் பணிகள் குறித்து கலந்து ஆலோசிக்கப்பட்டது. மாநிலத் துணை தலைவர் ஆல்பா நசீர் நபிகளின் வரலாறு குறித்து தமிழக மக்களுக்கு விளக்குவது நமது கடமை என்று பேசினார்.

தமிழக சிறைகளில் 20 வருடங்களுக்கு மேலாக வாடு ம் ஆயுள் சிறைவாசிகளை நல்லெண்ண அடி ப்படையில் விடுவிப்பதை போல, 20 வருடத்திற்கு மேலாக சிறையில் வாடும் முஸ்லிம் சிறைவாசி களையும் விடுவிக்க ஆவணம் செய்ய தமிழக அரசை இந்த பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பேரவை நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். மாவட்ட பொருளாளர் முஹம்மது கான் நன்றி கூறினார்.

Tags:    

Similar News