பட்டணம் காத்தான், பனைக்குளம், உச்சிப்புளியில் நாளை மின்தடை
- பட்டணம் காத்தான், பனைக்குளம், உச்சிப்புளியில் நாளை மின்தடை ஏற்படும்.
- மதியம் 1 மணி முதல் மாலை 4 மணி வரை ஏற்படும்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மின் பகிர்மான உதவி செயற்பொறியாளர் (ஊரகம்) செந்தில்குமார் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பெருங்குளம் துணை மின் நிலையத்தில் நாளை (8-ந் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதன் காரணமாக பனைக்குளம் சுற்றியுள்ள பகுதிகள், பனைக்குளம், ஆற்றாங்கரை, தேர்போகி, புதுவலசை, அழகன்குளம், பட்டணம் காத்தான், வாணி, காரிகூட்டம், சாத்தான்குளம், கழுகூரனி, குடிசைமாற்று குடியிருப்பு, ஏ.ஆர். குடியிருப்பு, ஆர்.எஸ்.மடை, ஆதம் நகர், உச்சிப்புளி, கீழ நாகாச்சி, செம்படையார்குளம், தாமரைக்குளம், ரெட்டையூரணி, புதுமடம், இருமேனி, பிரப்பன்வலசை, மானாங்குடி, நொச்சியூரணி, எஸ்.கே. வலசை, பெருங்குளம், வழுதூர், வாலாந்தரவை, குயவன்குடி. ஏந்தல், மொட்டையன் வலசை, வாணியங்குளம், பெருங்குளம், இந்திராநகர் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை மதியம் 1 மணி முதல் மாலை 4 மணி வரை மன்தடை ஏற்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.