உள்ளூர் செய்திகள்

கடலில் காணமால்போன மீனவரின் தாயாரிடம் உதவித்தொகை ரூ. 1 லட்சத்தை கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் வழங்கினார்.

மீனவர் குடும்பத்திற்கு உதவித்தொகை

Published On 2022-11-19 08:55 GMT   |   Update On 2022-11-19 08:55 GMT
  • கடலில் காணாமல் போன மீனவர் குடும்பத்திற்கு உதவித்தொகையை கலெக்டர் வழங்கினார்.
  • தமிழ்நாடு மீனவர் நலத்துறை ஆணையத்தின் மூலம் வழங்கப்பட்டது.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலு வலக கூட்டரங்கில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை யின் சார்பில் மீனவர் குறை தீர்க்கும் கூட்டம் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தலைமையில் நடை பெற்றது.

இதில் மாவட்ட கலெக்டர் மீனவர்களிடம் கோரிக்கைகள் குறித்த மனுக்கள் பெற்றுக் கொண்டு கடந்த மாதம் மீனவர்களிடம் கோரிக்கைகள் தொடர்பாக பெறப்பட்ட மனுக்களு க்கான தீர்வுகளை துறை அலுவலர்கள் மூலமாக தெரிவித்தார்.

பின்னர் அவர் பேசிய தாவது:-

மீனவர்கள் தொழில் மேம்பாட்டிற்காக அரசு பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி வருகின்றன. ரோச்மா நகர் மீனவர்கள் கிராமத்தில் கடலில் கல் நிரப்பும் பணி ரூ.10 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது. இதற்கான பணி விரைவில் நிறைவடையும். மீனவர்களுக்கான மீன்பிடி அடையாள அட்டை வழங்கு வதில் ஏற்படும் தாமதத்தை தவிர்க்க இனி அந்தந்த பகுதி உதவி இயக்கு னர்கள் மூலம் வழங்கிட அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அதே போல் மீன்பிடி தடைக்கால நிவாரண தொகை புதிய பயனாளிகளுக்கு அவர்க ளுடைய வங்கி கணக்கில் தமிழ்நாடு மீனவர் நலத்துறை ஆணையத்தின் மூலம் வழங்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து ராமேசுவரம் பகுதியை சேர்ந்த மகாத்மா என்ற கார்த்திக் என்ற மீனவர் 7 ஆண்டுகளுக்கு முன்பு கடலில் மீன்பிடிக்க சென்றபோது காணாமல் போய்விட்டார். அவரது தாயார் கலைய ரசிக்கு தமிழ்நாடு மீனவர் நல வாரியம் மூலம் வழங்க ப்பட்ட ரூ.1 லட்சத்திற்கான நிவாரண உதவித் தொகைக் கான ஆணை யினை வழங்கி னார்.

இந்நிகழ்ச்சியில் உதவி ஆட்சியர் (பயிற்சி) நாராயண சர்மா, மீன்வளத் துறை துணை இயக்குநர் காத்தவராயன் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News