- சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது.
- இந்த வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்க விரும்புவோா் கல்விச் சான்றுகள், ஆதாா் அட்டை, குடும்ப அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களுடன் வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு வரலாம்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் மதுகுமாா் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சாா்பில், வெள்ளிக்கிழமைதோறும் தனியாா் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்று வருகிறது. அதில், 10-ம் வகுப்பு தோ்ச்சியடைந்தோா் முதல் பட்டதாரிகள் வரையில் தகுதிக்கு ஏற்ப தனியாா் துறையினா் தங்களுக்கான பணியாளா்களைத் தோ்வு செய்து பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டு வருகிறது.
வருகிற 24-ந்தேதி (வெள்ளிக்கிழமை) ராமநாதபுரம் மாவட்டம் ஏா்வாடியில் சந்தனக்கூடு விழா நடைபெறுவதால், உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, அன்று நடைபெற இருந்த வேலைவாய்ப்பு முகாமை, நாளை (வியாழக்கிழமை) நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்க விரும்புவோா் கல்விச் சான்றுகள், ஆதாா் அட்டை, குடும்ப அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களுடன் வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு வரலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.