உள்ளூர் செய்திகள்

கூடுதல் காவல் துணை கண்காணிப்பாளர் உன்னி கிருஷ்ணன் குத்து விளக்கு ஏற்றினார்.

கவுசானல் கல்லூரியில் விளையாட்டு விழா

Published On 2022-06-05 09:58 GMT   |   Update On 2022-06-05 09:58 GMT
  • கவுசானல் கல்லூரியில் விளையாட்டு விழா நடைபெற்றது.
  • ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வணிக மேலாண்மையியல் துறை மாணவர்கள் பெற்றனர்.

ராமநாதபுரம்,

பாளையங்கோட்டை திருஇருதய சபை சகோதரர்களால் நடத்தப்படும் முத்துப்பேட்டை கவுசானல் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 16-வது ஆண்டு விளையாட்டு விழா நடந்தது.

தமிழ் உயராய்வு மையத்தின் முதுகலை முதலாண்டு மாணவி டயானா இறைவணக்கம் பாடினார். உடற்கல்வி இயக்குனர் சுகந்தராஜ் வரவேற்றார். கல்லூரிச் செயலர் மரியசூசை அடைக்கலம் வாழ்த்துரை வழங்கினார்.

முதல்வர் ஹேமலதா அறிமுகவுரையாற்றினார். சிறப்பு விருந்தினராக ராமநாதபுரம் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதல் காவல் துணை கண்காணிப்பாளர் உன்னி கிருஷ்ணன் கலந்து கொண்டு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார்.

இதில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வணிக மேலாண்மையியல் துறை மாணவர்கள் பெற்றனர். மாணவிகளின் கலை நிகழ்சிகள் நடந்தன. ஆங்கிலத்துறை உதவிப் பேராசிரியர் லட்சுமணன் நன்றி கூறினார். தமிழ் உயராய்வு மைய உதவிப் பேராசிரியர் சத்தியபாமா, தமிழ் உயராய்வு மையத்தின் இளங்கலை மூன்றாமாண்டு மாணவர் ஹரி ஹர சுதன், கணினி அறிவியல் துறை மாணவி நம்பு கமலி ஆகியோர் தொகுத்து வழங்கினர்.

Tags:    

Similar News